யாழில் ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டி ரயிலுடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அரியாலை, நாவலடியில் வசித்துவரும் 30 வயதுடைய மரியதாஸ் அரவிந்தன் என்ற நபரே இதன்போது பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

அதேவேளை, குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை உள்ளது எனவும், அதனால் அப்பகுதியில் அடிக்கடி ரயில் விபத்துக்கள் இடம்பெறுகின்றன எனவும், தமக்குப் பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊரவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.