கம்பஹா தக்ஷிலா O/L பரீட்சை மண்டபம் தொடர்பான கல்வி அமைச்சின் நடவடிக்கை

க.பொ.த சாதாரண தர மாணவர்கள் பரீட்சை மண்டபத்தில் சிரமங்களுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த மண்டபம் பரீட்சை மண்டபமாக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், மழை பெய்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து மண்டபத்தை மாற்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு , பரீட்சைகள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிக்கை செய்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சு பரீட்சைகள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பரீட்சைகள் திணைக்களம் சிரமங்களை எதிர்நோக்கும் பரீட்சார்த்திகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.