பாகிஸ்தானில் பயங்கரம்: கணவரை கட்டி போட்டு கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ஜீலம் நகரில் வசித்து வரும் ஒரு தம்பதியின் வீட்டுக்குள் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்து கணவரை கடுமையாக அடித்து தாக்கியுள்ளது.

இதன்பின்னர், அவரை கயிறு ஒன்றால் கட்டி போட்டுள்ளது. அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். அவரை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. இதனை டெய்லி பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அறிந்த பஞ்சாப் போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் கூறும்போது, கர்ப்பிணிக்கு நடந்த மருத்துவ பரிசோதனை முடிந்து விட்டது. அவரது ரத்த மாதிரியை தடயவியல் ஆய்வுக்காக லாகூருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் முடிவு வந்த பின்னரே மற்ற விவரங்கள் தெரிய வரும் என தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.