வீட்டில் நித்திரைக்குச் சென்ற 12 வயது மாணவியை காணவில்லையாம்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு கிராமத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூங்கிலாறு வடக்கில் வசித்து வந்த 12 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு நித்திரை கொள்ளச் சென்ற குறித்த மாணவியை அதிகாலையில் காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“அப்பா என்னை மன்னித்து விடுங்கள், என்னைத் தேடவேண்டாம்” என கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் சென்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.