ஏரோஃப்ளோட் இலங்கையுடனான உறவுகளை நிறுத்தி, மாலைதீவை நோக்கி ….

ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் மாலத்தீவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முடிவு ஜூன் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இலங்கை வணிக நீதிமன்ற உத்தரவு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏரோஃப்ளோட் விமானத்தை தடுத்து வைத்திருந்ததன் காரணமாக, இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தி , மாலைதீவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏரோஃப்ளோட்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டில் மாலத்தீவுக்கு வருகை தந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 67,000ஐத் தாண்டியுள்ளது, இது நாட்டின் மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 10% ஆகும்.

ஏரோஃப்ளோட் இன் புதிய முடிவால் மாலத்தீவுக்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.