இன்று கூடும் அமைச்சரவையில் ’21’ தொடர்பில் இறுதித் தீர்மானம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

21ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான இறுதி முடிவு இந்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அரசமைப்பின் 21ஆவது திருத்தத்துக்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.