சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ராஜேந்தர்.

இயக்­கு­ந­ரும் நடி­க­ரு­மான டி.ராஜேந்­தர் மருத்­துவச் சிகிச்­சைக்­காக நேற்று முன்­தி­னம் அமெ­ரிக்கா புறப்­பட்­டுச் சென்­றார்.

முன்­ன­தாக சென்னை விமான நிலை­யத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், தன் மகன் சிம்பு கூறி­ய­தால் உயர் சிகிச்­சைக்­காக அமெ­ரிக்கா செல்ல ஒப்­புக்­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

வயிற்­றில் ரத்­தக் கசிவு ஏற்­பட்­ட­தால் அண்­மை­யில் சென்­னை­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார் டி.ராஜேந் தர். அதன் பின்­னர் அவ­ரது உடல்­நலம் தேறி­யது.

இதை­ய­டுத்து அமெ­ரிக்­கா­வில் சிகிச்சை அளிக்க அவ­ரது குடும்­பத்­தார் முடிவு செய்­த­னர். அதன்படி, அண்­மை­யில் நடி­கர் சிம்பு அங்கு சென்று சிகிச்­சைக்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளார்.

“நான் வாழ்க்­கை­யில் எதை­யும் மறைத்­தது கிடை­யாது. ஆனால் பல நாள்­க­ளுக்கு முன்பே நான் அமெ­ரிக்கா சென்­று­விட்­ட­தாக கதை ­ப­ரப்பிவிட்­ட­னர். யார் என்ன எழு­தி­னா­லும் விதியை மீறி எதுவும் நடக்­காது,” என்­றார் ராஜேந்­தர்.

தம்­மைப் பற்றி எந்த வதந்­தி­கள் வந்­தா­லும் ரசி­கர்­கள் அதை நம்ப வேண்­டாம் என்று குறிப்­பிட்ட அவர், சிகிச்சை முடிந்து நாடு திரும்­பிய பின்­னர் மீண்­டும் செய்­தி­யா­ளர் களைச் சந்­திப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

“நான் வெளி­நாடு சென்று சிகிச்சை பெறு­வ­தற்கு எனது மகன் சிலம்­ப­ர­சன்தான் கார­ணம். சிம்பு கேட்­டுக்­கொண்­ட­தால்தான் ஒப்­புக்­கொண்­டேன். தன் படப்­பி­டிப்­பு­களை ரத்து செய்துவிட்டு பெற்றோருக்காக 12 நாள்­க­ளாக அமெ­ரிக்­கா­வில் தங்கி வேலை பார்த்து வரு­கி­றான்.

“என் மகனை நான் மன்­ம­தனாக மட்­டும் வளர்க்­க­வில்லை. மரி­யாதை தெரிந்­த­வ­னா­க­வும் வளர்த்துள்ளேன். சிம்பு படத்­தில் வல்­ல­வன், நிஜத்தில் நல்­ல­வன். பெற்­றோரை முதி­யோர் இல்­லத்­தில் சேர்த்­து­வி­டும் மகன்­கள் இருக்­கும் இந்த கால­கட்­டத்­தில் என் மகன் பெற்­றோ­ருக்­காக கடினமாக உழைத்து வரு­கி­றான்.

“இப்­படி ஒரு மகனைப் பெற்­ற­தற்­கும் குரு­வாக இருந்து ஒரு நல்ல சிஷ்­யனை உரு­வாக்­கி­ய­தற்­கும் நான் பெரு­மைப்­ப­டு­கி­றேன்,” என்­றார் டி.ராஜேந்­தர்.

Leave A Reply

Your email address will not be published.