மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு!

மஸ்கெலியா – சாமிமலை வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயங்களுடன் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“சாமிமலை வீதியில் புரவுன்சீக் தோட்டத்தின் ராணி தோட்டப் பிரிவைச் சேர்ந்த பெருமாள் ருக்மணி (வயது 58) என்பவர் வீடு சென்று கொண்டிருந்த வேளையில் மஸ்கெலியா நகருக்கு வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டார்.

குறித்த பெண்ணும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பலத்த காயங்களுடன் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், பெண் பலனின்றி உயிரிழந்தார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.