கேரளாக் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் சுமார் 26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளாக் கஞ்சாவை வைத்திருந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண் மன்னாரைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.