யாழில் காலில் முள் குத்திய இளைஞர் மரணம்!

காலில் முள் குத்தியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் ஒன்று குத்தியதாகவும், அவ்விடத்தில் வலி ஏற்பட்டுள்ளதாகத் கூறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நிலையில் விடுதியில் சேர்க்கப்பட்டு இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்நிலையில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.