கட்டார் எரிசக்தி விவகார இராஜாங்க அமைச்சருடன் கஞ்சன சந்திப்பு!

இலங்கைக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வது தொர்பில் புதிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில இது குறித்து அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

அமைச்சரின் பதிவு

கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கட்டார் எரிசக்தி இராஜாங்க அமைச்சரும் கட்டார் எரிசக்தி நிறுவனத்தின் தலைவருமான சாட் ஷெரிடன் அல் கபியை சந்தித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள அமைச்சர், எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு எரிபொருள், எரிவாயு போன்றவற்றைப் பெறுவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.