தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் மீது மர்மநபர்களால் சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல்.

தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்துக்கு அருகில் இன்று அதிகாலை நிஷாந்தன் காத்திருந்த வேளை பின்னால் வந்த இரு நபர்களால் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

“பாலியல் குற்றங்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பது தொடர்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செயற்படாமை தொடர்பிலும் நான் அண்மையில் கருத்துத் தெரிவித்த நிலையில் இது திட்டமிட்டு இடம்பெற்ற தாக்குதலாக இருக்கலாம்” என்று நிஷாந்தன் சந்தேகம் வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.