மயங்கிய நிலையில் தஞ்சமடைந்திருந்த வயோதிபத் தம்பதியரில் ஒருவர் மரணம்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடிக் கடற்கரையில் மயங்கிய நிலையில் தஞ்சமடைந்திருந்த இலங்கையைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகப் படகு மூலம் சென்று கடந்த திங்கட்கிழமை காலை தனுஷ்கோடிக் கடற்கரைப் பகுதியில் மயங்கிய நிலையில், மன்னார் – முருங்கன்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த சிவன், பரமேஸ்வரி ஆகிய வயோதிபத் தம்பதியினர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் பரமேஸ்வரி என்ற வயோதிபப் பெண் தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.