கிளிநொச்சியில் பரல்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி, ஏ – 9 வீதி அருகில் உள்ள வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 31 பரல் டீசல், 1 பரல் பெற்றோல் மற்றும் 25 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பரல்களைக் கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சியில் நேற்றும் பதுக்கிவைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.