எரிபொருள் விலை நிர்ணயத்தில் தவறு , கொள்ளை : ஜனக ரத்நாயக்க

தற்போதைய விலையை விட 200 ரூபா குறைந்த விலையில் ஒரு லீற்றர் எரிபொருளை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் ஒரு லீற்றர் எரிபொருளின் உண்மையான இறக்குமதி செலவு 300 ரூபாய்க்கு மேல் அதிகரிக்காது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று (7) தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை சூத்திரத்தில் எரிபொருள் இறக்குமதி செலவை மாற்றியமைத்துள்ளதாகவும், இந்த விலையைக் காட்டுவதன் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் தொகையும் அதிகமாகக் கணக்கிடப்படுகிறது எனவும் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கச்சா எண்ணெயை பீப்பாய் ஒன்றுக்கு 72.50 டொலர்களுக்கு கொள்வனவு செய்திருந்தால், அது உலக சந்தையில் 200 டொலர்களாக இருந்தாலும், அது முக்கியமில்லை எனத் தெரிவித்த அவர் , பெட்ரோல் பெரலின் விலை 171 டொலர் இருந்த போதிலும் , ஒக்டேன் 92 பெற்றோல் 100 டொலர்களுக்கே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஒக்டேன் 95 பெற்றோல் 103 டொலராகவும், ஆட்டோ டீசல் 112 டொலராகவும், சுப்பர் டீசல் 115 டொலராகவும், மண்ணெண்ணெய் 105 டொலராகவும் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பெறுமதிக்கேற்ப எரிபொருள் விலை கணக்கிடப்பட வேண்டுமென ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இந்தக் கணக்கீட்டில் வருமானம் வரி இழப்பு ஏற்பட்டு , எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு 200 ரூபா கிடைப்பதாகவும் , அப்படியிருந்தும் இறுதியில் எரிபொருளை கொள்வனவு செய்யக் கூட பணமில்லாமல் போய் உள்ளது எனவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் கோப் கமிட்டியிலும் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும்; கோப் குழுவில் ஜனக ரத்நாயக்க

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (06) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாம் பார்த்தபோது இங்கு ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தோம். இந்த எண்ணெய் CPC யினால் CEB க்கு வழங்கப்படுகிறது. இது தொடர்பில் ஆராய்ந்த போது அமைச்சர் முன்வைத்த விலைச்சூத்திரம் எவ்வித அடிப்படையுமின்றி முன்வைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தோம்.

அமைச்சர் மஹிந்த அமரவீர – அமைச்சரா தயாரித்துள்ளார் அல்லது அமைச்சு அதிகாரிகளா?

“அது எனக்கு தெரியாது. அமைச்சர்தான் ட்வீட் செய்தார். அவருடைய ட்விட்டரில் இருந்துதான் நான் பெற்றேன். எமக்கு முழுமையான தரவு கிடைத்தது. இறக்குமதி செலவு மற்றும் TAX ஆகியவற்றைக் கண்டுபிடித்தோம். இரண்டுக்கும் இடையே பொதுவாக 150-200 ரூபாய் வித்தியாசம் இருக்கும். அப்படியாயின், எமக்கு டீசல் இறக்குமதி செய்வதற்கான அடிப்படை செலவு CIF குறிப்பிட்டுள்ள மதிப்பு 174 டொலர்களாகும். ஆனால் தரவுகளைப் பார்க்கும்போது, ​​​​இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயின் விலை 174 அல்ல. இறக்குமதி செய்யப்பட்ட விலை 100 – 110 டொலர்களாகும். IOC ஜூலை 1 அன்று ஒரு தொகுதி டீசலைக் கொண்டு வந்துள்ளது. உண்மையில், எரிபொருள் இறக்குமதி செலவு 350 ரூபாவுக்கு அதிகமாகாது. இது பொய்யல்ல. கோப்புகளில் உள்ள உண்மைக் கதை.”

அமைச்சர் மஹிந்த அமரவீர – அப்படியாயின் 250 ரூபாய்க்கு குறைவாகவா கொண்டு வரப்பட்டுள்ளது?

“இப்போது எங்கள் பிரச்சனை என்னவென்றால், ஃபர்னஸ் ஒயிலின் செலவு 171 ரூபாய். CPC அதை CEB க்கு 419 ரூபாய்க்கு கொடுக்கிறது. அவர்கள் ஒரு லிட்டருக்கு 250 ரூபாய் வசூலிக்கிறார்கள்.”

அமைச்சர் மஹிந்த அமரவீர – சாதாரண மக்களுக்கு தேவையாக உள்ளது டீசல், பெற்றோல்தானே? 250 ரூபாய்க்கு வழங்க கூடியதாக இருக்கும் போது 400 ரூபாய்க்கு வழங்குவதாகதானே தாங்கள் சொல்கிறீர்கள். ?

“ரூ. 400 – ரூ. 450 என்று யாராவது சொன்னால் அது பொய். இது ஒரு உண்மைக் கதை, நான் உங்களுக்கு சொல்கிறேன், இறக்குமதியின் செலவு ரூ. 200 ஆக இருக்கும்போது எப்படி 400 ரூபா ஆகும். அப்படி நடக்க முடியாது. வரி செலுத்திய பிறகு. , ஒவ்வொரு எரிபொருள் விலையும் ரூ.250, ரூ.170, ரூ.180. ரூ.220. இந்த உண்மைக் கதை கடந்த வாரம் வரையானது. இந்த சூத்திரம் முழுவதுமாக பிழையானது. இது நடந்துள்ளது. தரவுகளை வழங்கியுள்ளேன்.

குறைந்த விலையில் ஒரு லீற்றர் எரிபொருளை வழங்கும் முறை தொடர்பில் வினவிய போதே ஜனக ரத்நாயக்க இதனை விளக்கினார்.

இந்த குற்றச்சாட்டின் பின் , கடுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர , சபையை விட்டு எழுந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.