சட்டவிரோத உத்தரவுகளை ஏற்காதீர்கள்! :சரத் பொன்சேகா பாதுகாப்பு தரப்பினரிடம் வேண்டுகோள்! (Video)

ஜனாதிபதியின் அதிகாரங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பிறப்பித்துள்ள சட்டவிரோத உத்தரவுகளை ஏற்காதீர்கள்! பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாதுகாப்பு தரப்பினரிடம் வேண்டுகோள்!

சட்டத்தை மதிக்கும், ஒழுக்கமான, தேசபக்தியுள்ள வீரர்கள்.

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் தற்போதைய பீல்ட் மார்ஷல் என்ற வகையில், ஜனாதிபதியின் அதிகாரங்களை சட்டவிரோதமாக அபகரித்து, தம்மைச் செயற்பாட்டு ஜனாதிபதியாக அறிமுகப்படுத்திய ரணில் விக்கிரமசிங்கவின் சட்ட விரோதமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான கட்டளைகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதப்படையினருக்கும், நாட்டின் சாதாரண நிராயுதபாணியான பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தற்போது மக்கள் மத்தியில் வதந்தி பரவி வருகிறது.

ஒரு சட்டத்தை மதிக்கும் மற்றும் ஒழுக்கமான இராணுவம் என்ற வகையில், நிராயுதபாணியான பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர்க்கவும், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக உங்கள் ஆயுதங்களை உயர்த்தவும் என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இத்தருணத்தில் நானும் போராட்ட களத்தில் நின்று மக்களுடன் முன்னணியில் நின்று மக்கள் போராட்ட வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன் என்பதை வலியுறுத்துகின்றேன்.

Leave A Reply

Your email address will not be published.