அரச தொலைக்காட்சி நிறுவனங்களும் போராட்டக்காரர்களால் முற்றுகை ஒளிபரப்புகள் இடைநிறுத்தம்.

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பில் எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலைமையில் அரச தொலைக்காட்சி நிறுவனங்களையும் போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்து வருகின்றனர்.

இதனால் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி, நேத்ரா அலைவரிசைகளின் ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஐ.டி.என். மற்றும் வசந்தம் அலைவரிசைகளின் ஒளிபரப்புகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.