மைத்திரி அணி யாருக்கு ஆதரவு? இன்று மாலை முக்கிய முடிவு.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தை இன்று மாலை 4 மணிக்குக் கூட்டுவதற்குக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கும் எனத் தெரியவருகின்றது.

தற்போது, கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான சாமர சம்பத் தஸநாயக்க, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், சு.கவின் விசேட மத்திய குழுக் கூட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.