மின் பற்றாக்குறையை சமாளிக்க 76 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யும் இந்தியா!

n நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க இந்த 2022-23ம் நிதியாண்டில் கிட்டத்தட்ட 76 மில்லியன் டன் (MT) நிலக்கரியை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி கடல் துறைமுகங்களில் இருந்து மின் நிலையங்களின் தூரத்தைப் பொறுத்து ஒரு யூனிட்டுக்கு 50-80 பைசா வரை மின்சார கட்டணம் அதிகரிக்கலாம் என மூத்த அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பருவமழையால் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான விநியோகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வெப்ப அலைகளால் மின்தேவை அதிகரித்ததால் நிலக்கரி இறக்குமதி அவசியமாகிறது. இந்தியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் தற்போது தினசரி சுமார் 2.1 மெட்ரிக் டன் நிலக்கரியைப் பயன்படுத்துகின்றன.

இதனிடையே அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Ltd – CIL) 15 மில்லியன் டன் நிலக்கரியையும், இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி லிமிடெட் (NTPC Ltd) மற்றும் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் (Damodar Valley Corporation – DVC) 23 மில்லியன் டன் நிலக்கரியையும் இறக்குமதி செய்யும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாட்டின் உச்சகட்ட மின் தேவை கடந்த ஜூன் 9 அன்று 211 ஜிகாவாட் என்ற சாதனையை எட்டியது. பருவமழையின் போது தேவை குறைந்ததால் ஜூலை 20 அன்று, அதிகபட்ச மின் தேவை 185.65 ஜிகாவாட்-ஆக இருந்தது.

எரிபொருள் கட்டணம் ஜெனரேட்டருக்கு ஜெனரேட்டருக்கு மாறுபடும். NTPC மற்றும் DVC-க்கு, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் 10% கலந்த பிறகு, ஒரு யூனிட்டுக்கு 50-60 பைசா வரை விலை உயரும். மற்றவர்களுக்கு, இது தூரத்தைப் பொறுத்தது அதாவது துறைமுகத்திலிருந்து மின் நிலையங்களின் தூரத்தைப் பொறுத்து மின் கட்டணம் 50 முதல் 80 பைசா வரை மாறுபடும். அரசு அதிகாரி ஒருவர் பேசுகையில், நடப்பாண்டில் நாம் நெருக்கடியைச் சமாளித்துவிட்டோமா என்பதை தெரிந்து கொள்ள செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும்.

கொடுக்கப்பட்ட இறக்குமதி ஆர்டர்கள் மூலம் நிலக்கரிகள் வர துவங்கி உள்ளன. இந்த காலகட்டத்தில், பற்றாக்குறை பொதுவாக 15 மெட்ரிக் டன்களாக இருக்கும், இதை கோல் இந்தியா ஜூலை இறுதியில் சந்திக்கும் என்று அதிகாரி கூறினார். ஆகஸ்ட்-செப்டம்பரில் நிலக்கரி பற்றாக்குறை அதிகரிக்கலாம். இதனால் அக்டோபர் 15-ம் தேதி வரை விநியோக தட்டுப்பாடு இருக்க கூடும் என கருதுவதாக மூத்த அரசு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உதவியுடன் இந்த பிரச்சனையை சமாளிப்போம் என்றும் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பிரச்சனை தொடங்கலாம் என்றும்அந்த அதிகாரி மேலும் கூறினார்.

முன்னதாக ஜார்கண்ட், பஞ்சாப், ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை கோடை காலத்தில் அதிக மின்தேவைக்கு மத்தியில் மின் உற்பத்தி நிலையங்களில் குறைந்த நிலக்கரி இருப்பு காரணமாக பிரச்சினையை எதிர்கொண்டன. ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் மின் உற்பத்தி நிலையங்களின் தினசரி எரிபொருள் தேவையை உள்நாட்டு நிலக்கரி விநியோகம் பூர்த்தி செய்ய முடியாது என்பதால், இறக்குமதியை அதிகரிக்க மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னதாக, அடுத்த 13 மாதங்களுக்கு மின் பயன்பாட்டுக்காக 12 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தயாராக இருக்குமாறு நிறுவனத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டது. நிலக்கரி இறக்குமதிக்கான ஆர்டர்களை மே 31-ஆம் தேதிக்குள் வெளியிடாவிட்டால், ஜூன் 15-ஆம் தேதிக்குள் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு வரத் தொடங்கவில்லை என்றால், கடன் செலுத்தாத gencos தங்கள் இறக்குமதியை 15 சதவீதம் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று மே மாதம் மின் அமைச்சகம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.