ஜனாதிபதி ரணில் – அமெரிக்க தூதுவர் இடையே சிநேகபூர்வ உரையாடல்

அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர், தூதுவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் உறவுகளை வலுவான அணுகுமுறை மூலம் முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் தூதுவர் உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.