பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து: ஒருவர் பலி: 12 பேர் மருத்துவமனைக்கு…

பூண்டுலோயாவிலிருந்து கம்பளை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் ஒருவர் மரணித்தும் , 12 பேர் காயமடைந்தும் உள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர், நுவரெலியா கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய புஸ்ஸல்லாவ, நாவக்கடொர பிரதேசத்தை சேர்ந்த வை. எம். தம்மிக்க ஹேமந்த யாப்பா (56) என்ற நபராவார்.

மற்றுமொரு பேரூந்திற்கு வழிவிட முற்பட்ட போது, பேருந்தின் ஒரு பகுதி மோதியதால் , பேரூந்து நழுவி விபத்துக்குள்ளானதில், இந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில், காயமடைந்தவர்கள் கொத்மலை மற்றும் கம்பளை வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.