ஹிருணிகா தரப்புக்கு எதிரான குற்றச்சாட்டு நீதவானால் நிராகரிப்பு.

ஜூலை 06 ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, ரெஹான் ஜயவிக்ரம உள்ளிட்ட பத்து பேரை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு கோட்டை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார்.

ஹிருணிகா பிரேமசந்த், ரெஹான் ஜயவிக்ரம உள்ளிட்ட பத்து பேருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை பொலிஸாரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரியமை சட்டவிரோதமானது என ஹிருணிகா உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் சுட்டிக்காட்டியது.

இதன்படி ஹிருணிகா உள்ளிட்டோரை சந்தேக நபர்களாக குறிப்பிடுமாறு கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.