காமன்வெல்த் போட்டியின் போது காணாமல் போன இருவர் மாட்டிக் கொண்டனர்!

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் வீரர் ஒருவரும், வீராங்கனை ஒருவரும் , பயிற்றுவிப்பாளர் ஒருவருமாக 3 பேர் காணாமல் போயுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. மூவரும் யாருக்கும் தெரிவிக்காமல் குழுவிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒரு ஜூடோ வீராங்கனை, ஒரு ஜூடோ பயிற்சியாளர் மற்றும் ஒரு மல்யுத்த வீரர் ஆகியோ இப்படி காணாமல் போயிருந்தனர்.

இவர்களில் இருவரை பிரித்தானிய பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். 30 வயதுடைய பெண் ஒருவரும் 40 வயதுடைய ஆண் ஒருவரும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மூவரும் காணாமல் போனதாக புகார் எழுந்ததையடுத்து, குழு உறுப்பினர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டுகளும் அணி மேலாளர்களால் வசப்படுத்தப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.