பிபா உலககோப்பை கால்பந்து: நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் தொடக்கம்.

22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

*ஏ பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து *பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் *சி பிரிவில் அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து *டி பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா *இ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், கோஸ்டாரிகா,ஜெர்மனி, ஜப்பான் *எப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா *ஜி பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் *எச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில், உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-ம் தேதி மோதுகின்றன என பிபா தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.