போலீசாரது கோரிக்கை நிராகரிப்பு : அரகலய அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் பிணையில் விடுவிப்பு! (Video)

சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலையான அரகலய “கோட்டா கோ கம” போராட்டத்தில் தீவிர அங்கத்தவராக இருந்த அருட் தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபரான அருட் தந்தை ஜீவந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, அருட் தந்தை ஜீவந்த பீரிஸை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது வெளிநாட்டு பயணத்தை தடை செய்து உத்தரவிட்ட நீதவான், நாளை பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த புகார் மனுவை எதிர்வரும் 26ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.