46 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ? : சி.வி. விக்னேஸ்வரன்.

சிறிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷ தெரிவித்ததாக,சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த கைதிகள் தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக நீதி அமைச்சர் தம்மிடம் தெரிவித்ததாக சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.