வசந்த முதலி உட்பட மூவரை , 90 நாட்கள் தடுத்து விசாரிக்க அனுமதி

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலியை 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

ஏப்ரல் 9ஆம் திகதி முதல் இடம்பெற்ற போராட்டத்தின் நடவடிக்கைகள் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.

இதன்படி, வசந்த முதலிகேவுடன் , கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷந்த பவந்து குணதிலக்க ஆகியோரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளது.

இவர்களை தவிர நேற்று (18) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது குருந்துவத்தை, பொரளை மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டு 16 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.