சஜித்தின் சகோதரி குடும்பத்துடன் இலங்கையைவிட்டு வெளியேற்றம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரியான துலாஞ்சலி பிரேமதாஸ தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை எரித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவத்தின்போது அவர் அங்கு இருந்தார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையிலேயே சஜித் பிரேமதாசஸவின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.