2வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் வென்றது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பென் போக்ஸ் 113 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் 103 ரன்னில் அவுட்டானார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நூர்ஜே 3 விக்கெட்டும், மகாராஜ், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 264 ரன்கள் பின்தங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களிடம் சிக்கிய தென் ஆப்பிரிக்கா திணறியது. அந்த அணியில் பீட்டர்சன் 42 ரன்னும், வான் டெர் டுசன் 41 ரன்னும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து 179 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து, டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.