மகாவலி ஆற்றில் குதித்த இளைஞர் ஒருவர் மாயம்!

கண்டி, பேராதனைப் பகுதியில் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

குறித்த நபர் ஆற்றில் குதித்த இடத்தில் சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை, மடிக்கணினி, 2 வங்கி அட்டைகள், பரீட்சை நுழைவுச்சீட்டு, பணப்பை மற்றும் ஒரு ஜோடி காலணி என்பன அங்கிருந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, காணாமல்போனவர் புலகஹாபிட்டிய, அஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.

காணாமல்போன நபரைத் தேடும் பணியில் பொலிஸார், கடற்படையின் உயிர்காக்கும் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ள நிலையில் பேராதனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.