இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கெபுலாவான் மெண்டவாய் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவான‌ இந்த பயங்கர நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் கெபுலாவான் மெண்டவாய் நகரம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை. அதேபோல் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இதனிடையே இந்தோனேசியாவின் அண்டை நாடான மலேசியாவிலும் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி 8.59 மணியளவில் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.