நாவிதன்வெளியில் புதிதாக உருவாகிய நூலகம்.

அம்பாறை நாவிதன்வெளி – 1 இளைஞர்களின் முயற்சியில் அமுதசுரபி பொது நூலகம் தோற்றம் பெற்றுள்ளது. இப் பிரதேசத்தில் நூலகத்தின் தேவை உணர்ந்து நூலகத்தினை உருவாக்கும் பணியில் முன்னோக்கி பயணித்தவர்களிடம் முதற்கட்டமாக ஒரு தொகுதி நூல்கள் சிறகுகள் அமையத்தின் படிப்பகம் செயற்றிட்டம் ஊடாக 17.08.2020 அன்று வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நூலகத்திற்கான மேலும் நூல்களை ஒழுங்கமைத்து வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றது. மேலும் நாவிதன்வெளி 15ஆம் கிராமத்தில் சிறகுகள் அமையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட படிப்பகம் (நூலகம்) ஒருவருட காலம் கடந்து பயணித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.