உண்ணாவிரதமிருக்கும் மகசின் கைதிகளுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் நாளை போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவுப் போராட்டம் மட்டக்களப்பில் நாளை நடைபெறவுள்ளது.

‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளில் காலை 7.30 மணிமுதல் காந்தி பூங்கா முன்றலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

“இந்தக் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க – அதிலும் தமிழ் பேசும் மக்கள் மீது கூடுதலாகத் திணிக்கப்படும் இந்தச் சட்டத்துக்கு எதிராக இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு உங்கள் ஆதரவை வழங்குங்கள்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.