விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது.

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோகிராம் எடையுள்ள 08 தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்ல முற்பட்ட விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (27) பிற்பகல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    அவரும் பாவம் தானே அரசாங்கத்திடம் பணமில்லை சம்பளம் கொடுப்பதற்கு அதனால் அந்த அதிகாரி இந்த வேலையைச் செய்தார் இது தப்பில்லையே உயர்அதிகாரிகள் செய்திருந்தால் எப்படியாவது பூசி மெழுகி விடுவார்கள்
    பாவம் அந்த ஏழை அதிகாரி

Leave A Reply

Your email address will not be published.