ஈரானில் மசூதியில் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி.

ஈரானின் ஷிராஸ் நகரில் உள்ள ஷியா மசூதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயங்கரவாத அமைப்பு ஒன்று இந்த தாக்குதலை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் “தக்ஃபிரி பயங்கரவாதிகள்” என அந்நாட்டு அரசு ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது. “தக்ஃபிரி” என்றால் ஐ.எஸ். அமைப்பு போன்ற கடும்போக்கு சன்னி முஸ்லீம் என்பது பெயர்.

ஈரானின் நாடாளுமன்றம் மற்றும் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கொமெய்னியின் கல்லறையை குறிவைத்து 2017 இல் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு உட்பட, ஈரானில் முந்தைய தாக்குதல்களுக்கு குழு பொறுப்பேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.