விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பியோட்டம்: மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்!

வவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்புக் காரணமான நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

அந்த நபரைக் கண்டுபிடிக்கப் பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் தப்பிச் சென்றுள்ளது.

படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தி அவ்விடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்ற நபர் தொடர்பில் தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 0718591343, 0242222226 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தி வவுனியா போக்குவரத்துப் பொலிஸாருக்குத் தகவலை வழங்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.