சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! – யாழில் அரசியல் பிரமுகர்கள் சங்கமம்.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது கௌரி சங்கரியின் உருவப்படத்துக்குச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய ‘கௌரி நீதியின் குரல்’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் – உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் – உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள், கல்விச் சமூகத்தினர், சிவில் சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் பாரியாராவார்.

அவர் நாட்டில் அதிகம் பேசப்படுகின்ற பல வழக்குகளில் முன்னிலையாகி – வாதாடி சாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.