அசீமுக்கு சக மனிதரை மதிக்க தெரியாது, அவரை எனக்கு புடிக்காது.!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு மகேஸ்வரி தற்போது தொலைக்காட்சிக்கு முதல் முறையாக கேட்டு ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பல தகவல்களை அவர் கூறியிருக்கிறார்.

இந்த வாரம் நான் வெளியேறி இருக்காவிட்டால் ராம் தான் வெளியேறி இருக்க வேண்டும் ஆனால் எதிர்பாராதவிதமாக என்னை வெளியேற்றி விட்டார்கள். இருந்தபோதிலும் எனக்கு மிகுந்த அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது என்று அவர் பேசியிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6ல் கடந்த வாரம் விஜே மகேஸ்வரி வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் என்பது சரியில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். பிக்பாஸ் வீட்டில் பலரும் அமைதியாக இருந்து வந்த நிலையில் மகேஸ்வரியின் சத்தம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது.

இருந்தபோதிலும் சில போட்டியாளர்களை ஒப்பிடும்போது அவர் மிக ஆக்டிவாகவே விளையாடி வந்தார். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. அவர் குறைவான வாக்குகளை பெற்று கடந்த வாரம் வெளியேறினார்.

வெளியேறிய பின்பு வீட்டிற்கு வந்த அவரை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி வரவேற்றிருந்தனர். இந்த வெளியேற்றத்திற்காக நான் வருத்தப்படவில்லை, மாறாக சந்தோஷம்தான் படுகிறேன் என்று அப்போதே ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இன்றைக்கு லைவில் வந்த அவர் பல தகவல்களைப் பேசியிருந்தார். குறிப்பாக வீட்டில் உள்ள பலரையும மிருகங்களுக்கு ஒப்பிட்டு கேள்வி எழுப்பிய போது அதற்கு ஒப்பிட்டு பேசியிருந்தார்.

அதில் விக்ரமனை சிங்கம் போன்றவர் என்றும் மிகத் தெளிவாக முடிவெடுப்பவர் என்றும் பேசியிருந்தார். மேலும் ரட்சிதா ஒரு பாம்பு மாதிரி என்றும், அசீம் ஒரு யானை மாதிரி, ஏடிகே ஒரு நரி மாதிரி என்று கூறினார்.

கடந்த வாரம் நான் வெளியேறி இருக்காவிட்டால் ராம் தான் வெளியேறி இருப்பார்,மேலும், வெளியே வந்த பிறகு தனக்கு அவ்வளவு ஆதரவு கிடைத்து வருவதாகவும் தொடர்ந்து தன்னை ஆதரிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.