அக்குறணை பிரதேச செயலகத்திற்கு  உட்பட்ட இரு கிராமங்கள் முடக்கம்.

கொரோனா தொற்றுக் காரணமாக அக்குறணை பிரதேச செயலகத்திற்கு  உட்பட்ட இரு கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது.

அக்குறணை பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
புளுகொஹொதென்ன, தெலும்புகஹவத்த ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவுகளுமே முடக்கப்பட்டுள்ளன.

இவ்விரு பிரதேசங்களிலும்  மேற்கொள்ளப்பட்ட  பி. சீ. ஆர். பரிசோதனையின் போது 38 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.