“வெந்து தணிந்தது காடு” யாழ். ராஜா திரையரங்கில் …. Trailer Video

4 வருட உழைப்பின் அடையாளமான “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் முன்னோட்டத்தை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன், சமூக வலைத்தளங்களூடாக உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எம் வெற்றிக்கு உதவுங்கள் என “வெந்து தணிந்தது காடு” இயக்குனர் மதிசுதா இலங்கை தமிழ் மக்களிடம் கோரிக்கை வைத்து ,  2023.01.29 ஞாயிறு பி.ப. 1.00 மணி திரையிடலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் .

திரையிடலுக்கு எதிராக வந்த , தடைகளை தகர்த்தெறிந்து இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுஸ்தாபனத்தின் அனுமதியோடும் ,  U தணிக்கை சான்றிதழோடும் ,
இலங்கை திரைப்படத்தை , திரையிடுவதற்கான பணிகளில் தனது நண்பர்களோடும் , திரைப்படக் குழுவினரோடும்  மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த இயக்குனர் மதிசுதா , உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவரது முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

மட்டுப்படுத்தபட்ட காட்சிக்கு மட்டும் அனுமதி கிடைக்கப் பெற்றதால் பணியாற்றியவர்களுடன் நெருங்கிய வட்டத்திற்கும் , முன்பதிவு செய்து கொள்ளும் நபர்களுக்கு மட்டுமே  “வெந்து தணிந்தது காடு”  காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது என்கிறார் அவர்.

 

யாழ் ராஜா திரையரங்கில்
29.01.2023  ஞாயிறு பிற்பகல் 1 மணிக்கு

சிறப்புக்காட்சியாக
“வெந்து தணிந்தது காடு”

சிரமத்தைத் தவிர்ப்பதற்கு கீழே படத்தில் உள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

இது எம்முடன் வாழ்ந்து எமக்காக இறந்தவர்களின் வரலாறு

Leave A Reply

Your email address will not be published.