கொடூர தாக்குதலில் குடும்பஸ்தர் படுகொலை! – பாடசாலை மாணவர்கள் மூவர் சிக்கினர்.

தலைக்கவசங்களால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த 16 வயதான பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம, குருந்திபிட்ட பிரதேசத்தில் நேற்று மாலை வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, 16 வயதான 3 மாணவர்களும் குறித்த குடும்பஸ்தரைத் தலைக்கவசங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலகெதர – குருந்திப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.