நாடாளுமன்றத்துக்குள் நாளை எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக் கோரியும், மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள்ளே மாபெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தில் நாளை குதிக்கவுள்ளன.

மேற்படி இரண்டு விடயங்களையும் அடிப்படையாக வைத்து நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே நாளை நாடாளுமன்றத்துக்குள்ளும் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.