சுற்றுலா முதலீட்டை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்.

இலங்கையில் சுற்றுலா முதலீட்டை ஊக்குவித்தல் தொடர்பான இணையவழி கலந்துரையாடல் (21.02.2022) சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. அனைத்து மாவட்ட அரசாங்க அதிபர்களுடனான கலந்துரையாடலாக இது அமைந்தது.

இணையச்செயலி ஊடாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் இணைந்து கொண்டார். இதன்போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்) , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட அலுவலகர் முதலானோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.