நாங்க தான் முதலில் கண்டுபிடிச்சோம் – ஸ்புட்னிக் 5

கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-5′ இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்’ என,ரஷ்ய சுகாதாரத் துறை மாஸ்கோவில் தெரிவித்துள்ளது.

மருந்தின் மீதான நம்பிக்கையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த கருதி, தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆராச்சியாளர்களுக்கு ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. அதனால்  தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

தங்கள் கண்டுபிடித்த தடுப்பூசி அனைத்து கட்ட சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்று  ரஷ்யா, தங்களது தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு அறிவிப்பை வெளியிட்டது. .

​ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள், ‘ஸ்புட்னிக்-5 தடுப்பூசிக்கு சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கவுள்ளது.  வரும் 13ம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்படும்’ என, அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.