கொழும்பு துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு, 04 பெண்கள் உட்பட 09 பேர் வைத்தியசாலையில் – ஆபத்தான நிலையில் ஒருவர் !

கொழும்பு துறைமுகத்தின் 06ஆம் இலக்க வாயிலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 04 பெண்கள் உட்பட 09 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலேபட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்திற்கு குறுக்கே நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள களஞ்சியசாலையில் இரும்பு திருட வந்த இருவரை விசாரணை செய்ய சென்ற போது, ​​அருகில் வசிப்பவர்கள் தலையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அப்போது பணியிடத்தில் பணியாற்றிய தனியார் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

புளூமெண்டல் தோட்டத்தைச் சேர்ந்தவர்களே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். இவர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், தனியார் பாதுகாப்புப் பிரிவினரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கச் சென்றபோது, ​​ பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.சுடப்பட்ட ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.