துப்பாக்கிசூட்டில் கணவன் பலி; மனைவி படுகாயம்! – காலியில் பயங்கரம்.

துப்பாக்கிச்சூட்டில் கணவன் உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் காலி, ஹபராதுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டோவில் பயணித்த தம்பதியர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் 38 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.