நீரில் மூழ்கி இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட இருவர் மரணம்!

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மஹவெல – ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மீட்கப்பட்ட நிலையில் நாலந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாமுல்ல – கிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தாம் பணியாற்றிய இராணுவ முகாமின் அதிகாரிகள் குழுவுடன் மஹவெல பகுதிக்குச் சென்ற போது அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

இதேவேளை, கல்கிரியாகம – உஸ்ஸான பாலத்துக்கு அருகில் உள்ள ஹவன்வெல்ல ஓயாவில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கலேவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று கல்கிரியாகம பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 37 வயதுடைய உஸ்ஸான, தேவஹுய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சடலம் கலேவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.