கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் பரிதாபச் சாவு!

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை பிரதேசத்தில் வீட்டின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்தே குறித்த சிறுவன் சாவடைந்துள்ளார்.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுவன் வீட்டின் பின்புறம் இருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிரம்பிய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.