மொரட்டுவை பல்கலை மாணவர்களுக்குக் கேரள கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது!

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கேரள கஞ்சா விற்பனை செய்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து செல்லும் வழியில் சந்தேகநபர் சில காலமாகக் கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து கேரள கஞ்சா பொட்டலங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.