கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கனமழை காரணமாக கொழும்பு நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

பல இடங்களில் மரங்கள் விழுந்ததால், அவை அகற்றப்பட்டுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு கோட்டை, மருதானை, பஞ்சிகாவத்தை, பொரளை, சேதாவத்தை, ஆர்மர் வீதி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கொழும்பின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.